search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியான பயிற்சி வகுப்பு"

    கோவில்களில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த போதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. #HCMaduraiBench
    மதுரை:

    தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது முற்றிலும் விதிமீறலாகும்.

    கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனியார் தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அனுமதியின்றி செயல்பட்ட வாழும் கலை அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து நாளை (இன்று) ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர், தஞ்சை பெரிய கோவில் தேவஸ்தான இணை ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கோவில் உதவி கமி‌ஷனர் பரணிதரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் எந்த அடிப்படையில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


    இதற்கு பதில் அளித்த தொல்லியல்துறை வக்கீல், கோவில் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு என கேட்டதால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்படி என்றால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என திட்டமிடல் குறித்த வரைப்படம் அவர்களிடம் ஏன் கொடுக்கப்படவில்லை என தொல்லியல் துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு போதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் தீர்ப்புக்காக வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
    தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #HCMaduraiBench
    மதுரை:

    தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7-ந்தேதி ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது முற்றிலும் வீதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    மேலும் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனியார் தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது பாரம்பரியமிக்க தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட தொல்லியல் துறை பாதுகாப்பு உதவியாளர் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். #HCMaduraiBench
    தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டனர். #Tanjoretemple #SriSriRaviShankar
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.

    தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.

    இது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.

    இதைத்தொடர்ந்து வெங்கட், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



    அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்கள் உடனே அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். #Tanjoretemple #SriSriRaviShankar

    ×